AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Wednesday 25 September 2013

7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை 2011 ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்க வேண்டும்.

7–வது ஊதியக்குழு அமைக்கும் மத்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த குழுவின் பரிந்துரைகளை 2011 ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை திருத்தியமைக்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்க வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு  தற்போது  ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. அகவிலைப்படியில் 50 சதவீதத்துக்கு மேல் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும். எங்கள் இந்த கோரிக்கையை ஊதியக்குழு பரிசீலனை செய்ய வேண்டும்.

7-வது சம்பள கமிஷன் அறிவிப்பு!

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்த்த 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சி்ங், அறிவித்து உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடையப்போகிறார்கள். தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன

2016-ல் அமலுக்கு வரும்
6-
வது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள், 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன் மூலம் அப்போதைய நிலவரப்படி 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைந்தனர். இந்நிலையில் 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். இது குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 7-வது சம்பள கமிஷன் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பெயர் குறித்த விவரம் விரைவி்ல் வெளியிடப்படும். இதற்கான பரிந்துரைகள் அமல்படுத்த 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும். (2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும்) இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர் என்றார்.
தேர்தல் ஆதாயம்
இந்தாண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்களும், அடுத்த ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தலும் வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு திடீரென 7-வது சம்பள கமிஷனை அறிவித்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்ப அதி்ர்ச்சி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ,வரப்போகும் பொதுத் தேர்தலை மனதில் வைத்து தான் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன்
இதற்கிடையே நாட்டின் முதல்முறையாக ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ உயரதிகாரிகள், தங்களது சம்பள பிரச்னை குறித்து மத்திய அரசிடம் முறையிட்டனர். இதில் 6-வது சம்பள கமிஷனின் கோரிக்கை குறித்து வலியுறத்தினர். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7-வது சம்பள கமிஷனுடன், முதன்முறையாக ராணுவத்தினருக்கான சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுளளது

DA order released by Min. of Finance!

Saturday 21 September 2013

A SUCCESS TO OUR CIRCLE UNION EFFORTS IN GRANTING HRA IN CONSONANCE WITH CENSUS 2011 FIGURE

மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி ! இந்திய முழுமைக்கும் நாம் எடுத்த பிரச்சினை  வழி ஏற்படுத்தப்போகிறது !

இந்தப் பிரச்சினையில் முழு கவனம் செலுத்திய
 நமது பொதுச் செயலர் 
தோழர்  கிருஷ்ணன், முன்னாள் பொதுச் செயலர் தோழர் KVS , 
நமது துணைப் பொதுச் செயலர் தோழர்.  N.S. ஆகியோருக்கு 
நம் மாநிலச் சங்கத்தின்  நன்றி !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

கடந்த 24.07.2012 இல் நடைபெற்ற நமது மாநில கூட்டு ஆலோசனைக் குழு கூட்டத்தில் (RJCM )  நம்மால் எடுக்கப் பட்ட பிரச்சினை ,  CENSUS 2011 புள்ளி விபரங்களின் அடிப்படையில் URBAN  AGGLOMERATION  ஆக அறிவிக்கப்பட்டும் அல்லது மக்கள் தொகை உயர்ந்தும் உள்ள  நகர விரிவாக்கப் பகுதிகளுக்கு அல்லது   பெருநகரப் பகுதிகளுக்கு  உயர் வீட்டு வாடகைப்படி  வழங்கப் பட வேண்டும் என்பதே .  RJCM  MINUTES  நகலை கீழே பார்க்கவும் . SL . 19  ITEM 31 இல் நமது SUBJECT  இக்கு ,  ' IT IS A SUBJECT MATTER TO BE DECIDED AT DIRECTORATE LEVEL'  என்று நமது  CPMG  பதில் அளித்துள்ளார். CENSUS  புள்ளி விபர அடிப்படியிலேயே  உயர் வீட்டு வாடகைப் படி வழங்கலாம் என்று  நாம் வலியுறுத்தியிருந்தோம்.

CPMG  அவர்கள் இந்த பிரச்சினையை தீர்க்காது போனதால்  உடன் இந்த பிரச்சினை குறித்து நமது அகில இந்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

கடந்த 17.06.2013 அன்று  JCM  இலாக்கா குழு கூட்டத்தில் இந்த பிரச்சினையை எழுப்பிட நாம்  SUBJECT  அனுப்பியிருந்தோம் . அதன் நகலையும் 17.06.2013 அன்றே  நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம். அதன் நகலை கீழே  பார்க்கவும் .

இதன் அடிப்படையில் கடந்த 17.07.2013 அன்று நமது பொதுச் செயலரால் இந்த பிரச்சினை   நமது துறை முதல்வருக்கு எடுத்துச் செல்லப் பட்டது . தற்போது  இலாக்காவில் இருந்து  இந்தியாவில்  உள்ள அனைத்து CPMG  மற்றும் GM  FINANCE  களுக்கு  CENSUS  2011 அடிப்படையில்  URBAN  AGGLOMERATION  ஆக அறிவிக்கப் பட்டும் ,  மக்கள் தொகை உயர்வாலும்  உள்ள  பகுதிகளை கண்டறிந்து , அந்த பகுதிகளுக்கு  உயர் வீட்டு வாடகைப் படி வழங்கிட  உரிய PROPOSAL  களை அனுப்பிடுமாறு  உத்திரவிடப்பட்டுள்ளது. அந்தக் உத்திரவின் நகலையும் கீழே பார்க்கவும்.

தற்போது சென்னை போன்ற பெருநகரப் பகுதிகளில் பல புதிய விரிவாக்க பகுதிகளுக்கு   சென்னை  பெருநகர  HRA  கிடைக்க  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  இது போலத்தான்  கோவை, திருச்சி, மதுரை, சேலம் , ஈரோடு, திருப்பூர்  போன்ற பகுதிகளும் ஆகும்.  

கோட்ட/ கிளைச் செயலர்கள் இந்த விஷயத்தில் விழிப்புடன் செயல் பட்டு அந்த அந்த பகுதி கோட்ட அதிகாரிகளுடன் பேசி   CENSUS  2011 அடிப்படையில் உயர் வீட்டு வாடகைப் படி வழங்கிட  உரிய பகுதிகளை பரிந்துரைக்கும் படி செயல் பட வேண்டுகிறோம். URBAN AGGLOMERATION  பகுதிகள் குறித்த  விபரம் GOOGLE SEARCH  இல்  CENSUS  2011 என்று TYPE  செய்து தேடினால் கிடைக்கும். 

உடன் உங்கள் பகுதிகளை கண்டறிந்து செயலாற்றிட வேண்டுகிறது மாநிலச் சங்கம் .  கோட்ட அதிகாரிகள் சரியாக பதில் அளிக்க வில்லையானால் மாதாந்திரப் பேட்டியில்  SUBJECT  வைத்து பதில் பெறவும்.அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பி வைத்திடவும்.  நன்றி ..

இந்த செய்தியை  COPY செய்து பிரதி எடுத்து உங்கள் பகுதி தோழர்களுக்கு கொடுக்கவும்.

Thursday 5 September 2013

Lok Sabha Passes Pension Fund Regulatory and Development Authority Bill, 2011 with official amendments


Press Information Bureau 
Government of India
Ministry of Finance 

04-September-2013 18:31 IST

Lok Sabha Passes Pension Fund Regulatory and Development Authority Bill, 2011 with official amendments;

Subscribers Seeking Minimum Assured Returns Allowed to OPT for Investing their Funds in such Scheme Providing Minimum Assured Returns 

The Pension Fund Regulatory and Development Authority Bill (PFRDA), 2011 was passed by the Lok Sabha today with official amendments. It was earlier introduced in Lok Sabha on the 24th March, 2011 to provide for a statutory regulatory body the Pension Fund Regulatory and Development Authority (PFRDA) under the provisions of the Bill. The legislation seeks to empower PFRDA to regulate the New Pension System (NPS). 

The PFRDA Bill, 2011 was referred to the Standing Committee on Finance on the 29th March, 2011 for examination and report thereon. The Standing Committee on Finance gave its Report on 30th August, 2011. Some of the key amendments incorporated in the Bill based on the recommendations of the Standing Committee on Finance are as follows: 

a) That the subscriber seeking minimum assured returns shall be allowed to opt for investing his funds in such scheme providing minimum assured returns as may be notified by the Authority; 

b) Withdrawals will be permitted from the individual pension account subject to the conditions, such as, purpose, frequency and limits, as may be specified by the regulations; 

c) The foreign investment in the pension sector at 26% or such percentage as may be approved for the Insurance Sector, whichever is higher; 

d) At least one of the pension fund managers shall be from the public sector; 

e) To establish a vibrant Pension Advisory Committee with representation from all major stakeholders to advise PFRDA on important matters of framing of regulations under the PFRDA Act. 

Beside above, the Bill would make the Pension Fund Regulatory and Development Authority a statutory authority. Presently, it has non-statutory status. The NPS is based on the principle that ‘you save while you earn’ especially for retirement and is mainly for those who have a regular income. 

This Bill would also provide subscribers a wide choice to invest their funds including for assured returns by opting for Government Bonds etc. as well as in other funds depending on their capacity to take risk. 

The NPS has been made mandatory for all the central Government employees (except armed forces) entering service with effect from 1.1.2004. Twenty six (26) States have already notified NPS for their employees. NPS has been launched for all citizens of the country including un-orgnised sector workers, on voluntary basis, with effect from 1st May, 2009. Further, to encourage the people from the un-organised sector to voluntarily save for their retirement, the Government has launched the co-contributory pension scheme titled “Swavalamban Scheme” in the Budget of 2010-11. As on 14th August, 2013, the number of subscribers under NPS is 52.83 Lakh with a corpus of Rs.34, 965 crore. In order to effectively invest and manage huge funds belonging to a large number of subscribers and to ensure the integrity of NPS, creation of a statutory PFRDA with well defined powers, duties and responsibilities is considered absolutely necessary and would benefit all NPS subscribers. 

The PFRDA Bill authorizes the PFRDA to establish a Pension Advisory Committee by notification under Clause 44 of the PFRDA Bill, 2011. The object of the Pension Advisory Committee shall be to advise the Authority on matters relating to the making of the regulations under the PFRDA Act. 

Market based returns and wide coverage based on several investment options in the pension sector will build up the confidence in the subscribers, whereas withdrawals for limited purposes from Tier-I pension account will be an incentive for them to join NPS. 

Wednesday 4 September 2013

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் 'சி'
தென் சென்னை கோட்டம், சென்னை 600016

சுற்றறிக்கை எண்: 2                                                                         தேதி:05.09.2013

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!

உங்கள் அனைவருக்கும் கோட்டச் சங்கத்தின் அன்பு வணக்கங்கள்நமது கோட்டம் புதிதாக உருவாகப்பட்டபோது கிண்டி தொழிற்பேட்டையை உள்ளடக்கிய அதன் எல்லைகளும் தற்போது மேலும்  பெருங்குடி முதல் சோழிங்கநல்லூர் வரை நீண்டு தொழில் நுட்ப பூங்காக்கள் நிறைந்து பரந்து விரிந்த கோட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்தல் அன்றைய ஊழியர்களின் எண்ணிக்கை தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை என்பது கண் கூடாக காண முடிகின்றது. ஆம்! இன்றைய வேலைப்பளு மற்றும் ஆட்பற்றாக்குறை காரணம் தான் என்ன? நிர்வாகம் Establishment Branch பிரிவில் காலியிடங்களை சரியாக கணக்கிட படவில்லை என்பதுதான் உண்மை. இதனால் ஊழியர்கள் எவ்விதமான விடுப்பும்  எடுக்க முடிய வில்லை. அனைவரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ள இந்த சூழ்நிலையில் minus  balance show-cause notice  மூலம்  கோட்ட நிர்வாகம் ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய நிர்வாகத்தின் செயல்பாடுகள்

நம்முடைய இலாக்காவில் கணினிமயமாக்கப்படும் போது அவசரகதியாக சேமிப்பு வங்கிப்பிரிவில் DATA ENTRY செய்ததை எவரும் மறந்துவிட முடியாது.   HOவில் SO dataகளை கோண்டு Out sourcing மூலம் Data entry செய்யப்பட்டு அதனை SO களில்  upload செய்யப்பட்டு முன்னுக்கு பின் முரணான SB இருப்புக்கள். ஒவ்வொரு HOவிலும் SBCO Branchல் UP (un posted amount) என்பது  இருக்கும் அதை எந்தெந்த அலுவலகத்தில் எவ்வளவு உள்ளது என்று சரிபார்த்து மற்ற கோட்டங்களில் சரிசெய்தது போல் சரிசெய்யாமல் மொத்தமாக SB 62 வில் இன்னும் adjust செய்யமல் பல லட்சம் உள்ளதுஒவ்வொரு தனிநபரின் கணக்குகளும் மிகச்சரியாக கணினியில் மாற்றம் செய்திட வேண்டும் என்பதை மனதில் கொள்ளாமல், இலாக்காவில் சொன்னார்கள் என்று மேல் அதிகாரிகளும், மேல் அதிகாரி சொன்னார் என்று கீழ் அதிகாரிகளும், "வெள்ளைக் காக்கை பறக்கிறது என்றால் .. ஆமாம்.. ஆமாம் நான் கூட பார்த்தேன் .. நாலு காக்கை பறப்பதை" என்பதுபோல, அதற்கான துறைசார்ந்த அறிவைச் செலுத்தாமல் கீழ்மட்ட ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி சேமிப்பு வங்கிக் கணக்குகளை குப்பைக் காடாக்கிய கொடுமை நம்துறை தவிர வேறு எந்த துறையிலும் நடந்திருக்க சாத்தியக் கூறு இல்லை.

கடந்த 10 ஆண்டுகளாக இவை சரி செய்யவே முடியவில்லைவிளைவு , BO,  SO, SO SB , SBCO , ICO(SB), MAIL OVERSEER, IPO, ASP , SPOS.,  என்று ஆயிரம் CHECKING MECHANISM  இருந்தும் கூட  கோடிக்கணக்கில்  பல அலுவலகங் களில் MULTIPLE FRAUD.   போதாதற்கு CORE BANKING கூத்துகளில்...................... கணக்குகளின் இருப்புகள் சரி செய்யப்பட வேண்டிய  அவசரம் மீண்டும் ...... பார்த்தால்  மீண்டும் கோடிக் கணக்கில் MINUS BALANCE.................

இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டுமே... எப்படி செய்வது? இருக்கவே இருக்கிறான்... எதையும் சுமக்கும் பொதிக் கழுதை....   அப்பாவி ஆம்! SOவில் அன்று பணிபுரிந்த அஞ்சலக எழுத்தன்.... பிடித்து மாட்டு ...  பணத்தைக்  கட்டு ...  இல்லையானால்  விதி 16, விதி 14.. பணி ஒய்வு பெறுபவரா ? ... நிறுத்து  ஓய்வுக் கால பலன்களை ... "ஐயோ வேண்டாம்.. ஆளை விட்டுவிடு.. நான் VR இல் செல்கிறேன்" என்றால்.. அதுவும் கிடையாது ... நீ இங்கேயே  சாக வேண்டும் இல்லையேல்  பணத்தைக் கட்ட வேண்டும் .... இதுதான் இன்றைய  நிர்வாகத்தின்  மோசமான  பார்வை ... இவற்றை எதிர்கொள்ள சட்டம் இருக்கிறதா ? நிச்சயம் இருக்கிறது ... ஆனால் நம்மில் பலருக்கு தெரிவதில்லை ...

MINUS BALANCE என்று கூறி  நேரிடையாக  சம்பளப் பிடித்தம் செய்திட முடியாது ...  சட்டப் படி SHOW CAUSE NOTICE வழங்கப் பட வேண்டும் ... இப்படி SHOW CAUSE NOTICE வழங்காமல்  ஊதியத்தில் பிடித்தம் செய்திட உத்திரவிடப் பட்டால்  உடன் நமது கோட்டச் செயலரை அணுகுங்கள் ... அவர்கள் நிச்சயம்  கோட்ட அதிகாரியிடம்  சட்ட விதிகளை எடுத்துக் காட்டி , இது தவறான அணுகுமுறை  என்பதை நிலை நிறுத்துவார் ... SHOW CAUSE NOTICE வழங்கப் பட்டால் , நமது செயலரை அணுகி அதற்கு உரிய வகையில்  பதில்  தயார் செய்து அனுப்ப  உதவிடக் கோருங்கள் ..... உங்களுக்கு .... உங்கள் மீதான  தவறு சரிவர நிரூபிக்கப்  பட ... அதற்கான ஆவணங்கள் உங்களிடம் காட்டப் பட வேண்டும்..அதன் நகல்கள் உங்களுக்கு வழங்கப் பட வேண்டும் ... MINUS BALANCE க்கு  உரிய DEPOSITOR இடம் இருந்து  உங்கள் கோட்ட அதிகாரி  உரிய தொகையை வசூல் செய்திட சட்ட ரீதியாக  நடவடிக்கை எடுத்திட வேண்டும்.   இவை எதுவும் செய்யாமல்  உங்களிடம்  எந்தத் தொகையும் பிடித்தம் செய்திட  சட்டம்  அவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கிட வில்லை ....

உங்களின் ... தொழிற் சங்கத்தின்...எல்லாவித முயற்சிகளையும் மீறி ... அடாவடியாக  உங்களின் சம்பளத்தில்  பிடித்தம் செய்திட உத்திரவிடப்பட்டால் நிச்சயம் நீதி மன்றம்  உங்களுக்கு பாது காப்பு வழங்கும் ... அதற்கு செல்ல உங்களுக்கு  தொழிற் சங்க நிர்வாகிகள் உதவி செய்வார்கள்... அதற்கு  கூட்டாக... தனியாக...கோட்டச்  சங்கம் சேர்த்து...என்று பலவகையில்  வழக்கு  தொடுத்து  தடையாணை வாங்கிட .... அந்தந்த  சூழலுக் கேற்ப .... அந்தந்த CASE க்கு ஏற்ப ..  வழி வகை உள்ளது.

அதுவும் போதாதென்று கம்ப்யூட்டர் சீட், பேப்பர் ஸ்டிக்கர்   எதுவுமே சரியாக கோட்ட நிர்வகத்தால் வழங்க படுவதில்லை தினமும் கோட்ட அலுவலகத்திற்கு சென்று கையேந்த வேண்டிய சூழ்நிலை. அதுவும் தரமற்ற ஸ்டிக்கர்களை வாங்கி நமது அஞ்சலகத்தில் உள்ள பிரிண்டரில் ரிப்போர்ட்  எடுப்பதற்குள் ஊழியர் படும் பாட்டிற்கு அளவே  இல்லை இது தான் இன்றைய நிலைமாதந்திர பெட்டியில்  எடுத்து சொன்னாலும் தற்காலிக முடிவு மட்டும் எடுக்கப்படுகிறதுவாடகை கட்டிடத்தில் இயங்கும் சோளிங்கநல்லூர் மடிப்பாக்கம் போன்ற அலுவகங்களின அவல நிலையை எத்தனையோ முறை எடுத்து குறியும் நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை.

இது போன்ற நிர்வாக சீர்கேடுகளை நாம் பட்டியல் இடமுடியும் இவற்றிக்கு கோட்ட  நிர்வாகம் ஒரு சரியான தீர்வு காணப்படவில்லையெனில் நிர்வாகத்தை கண்டித்து விரைவில் நாம் போராட்ட வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தயராக இருக்க வேண்டுகிறோம்.

உறுப்பினர் சந்தா ரூபாய் 50/-

திருவனந்தபுரம்  அகில இந்திய மாநாட்டின் முடிவின் படி அனைத்து மாநில செயலர்களும் முழு நேர தொழிற்ச் சங்க (அயற்பணி) பணியாற்ற வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு நமது உறுப்பினர் சந்தா  ரூபாய் 30/- இல் இருந்து  ரூபாய் 50/- ஆக மறுகிறது எனபதனை  நமது உறுப்பினர்களுக்குதெரிவித்து கொள்கிறோம். இது 01.07.2013 முதல் நடைமுறைக்கு வருகிறது . இதன்அடிப்படையில் பகுதி பணமும்  ஒதுக்கீடு மாற்றப்பட்டுள்ளது
கோட்ட சங்கம்    ------  ரூ. 24.50
மாநில சங்கம்      ------  ரூ. 15.00
மத்திய சங்கம்      -----   ரூ.   8.00
சம்மேளனம்          ----    ரூ.  2.50
                            ------------------------------
                                             ரூ. 50.00
                            ------------------------------

போயாச்சி! போயாச்சி! மெக்கன்சி  கன்சல்டன்சி திரும்பி போயாச்சி!

அஞ்சல் துறைப் பணிகளை சீரமைக்க ஆலோசனை வழங்க இலாக்காவால் மெக்கன்சி  கன்சல்டன்சி என்னும் அமெரிக்க நிறுவனம் அமர்த்தப்பட்டதுஆனால் அந்த நிறுவனமோ பல நாடுகளிலும் நல்ல லாபத்தில் இயங்கிய  பல கம்பெனிகளை தங்களது அபத்தமான ஆலோசனைகளால் நட்டத்தில் ஆழ்த்தி மூடுவிழாவும்  நடத்திய நிறுவனம்  ஆகும்.இந்த நிறுவனத்தை நமது துறைக்கு ஆலோசனை வழங்குவதற்கு ரூ.100 கோடிக்கு கட்டணம் கொடுத்து 2  ஆண்டுகளுக்கு முன் நியமித்தது. ஆனால் நிலைமை தாறுமாறாக மாறுவதைஉணர்ந்து கொண்ட நமது இலாக்கா  M N O P –L1, L2 பிரிப்பக  முறையை கைவிட்டு முந்தைய முறையில் இனி அஞ்சல் பிரிப்பகங்கள் செயல்படும் என்று அறிவித்துள்ளதுஒன்றுபட்ட நமது போராட்டத்தின் வெற்றி இது ஆகும்.

புதிய பென்ஷன் மசோதா திட்டம்

அடுத்த தாக்குதலாக நமது மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் மசோதா திட்டம்   பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறதுஇதன் படி மத்திய அரசு பணியில் 2004  ஆம் ஆண்டுக்கு பின் பணியில்  சேர்ந்தவர்களுக்கு  புதிய பென்ஷன் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசு தன் பங்காக ஒரு தொகையை செலுத்தி அப்பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை பிரித்து கொடுக்கும் அபத்தமான திட்டத்தை நடைமுறை படுத்த முயலுகிறது. இதை அணைத்து மத்தியஅரசு ஊழியர் சங்கங்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து  வருகிறதுஇத்திட்டம் நிறைவேறினால் அடுத்து பென்ஷன் திட்டத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர் அனைவருக்கும் நீட்டிக்கும் எண்ணம் மத்திய  அரசுக்கு இருந்து வருகிறதுஎனவே பாராளுமன்றத்தில் இத்திட்டம் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள மத்திய/மாநில அரசு ஊழியர்கள் 3.9.2013 அன்று அணைத்து மத்திய  அரசு அலுவலகம் முன்பும்  மாபெரும் ஆர்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டதின் அடிப்படையில் நமது N F P E  சம்மேளனமும் அணைத்து தலைமை அஞ்சலகம் மற்றும் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளதுஅதன் படி நமது கோட்டத்தில் புனித தாமஸ் மலை தலைமை அஞ்சலகம் முன்பு 3.9.2013 அன்று அஞ்சல் மூன்றுஅஞ்சல் நான்கு மற்றும் GDS (NFPE) தலைவர்களின் கூட்டு  தலைமையில்  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அணைத்து பகுதி தோழர்களும் /தோழியர்களும் முக்கியமாக 2004 ஆம் ஆண்டுக்கு பின்  பணியில் சேர்ந்த ஊழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் சிறப்பாய் நடைபெற்றது.

முயன்றால் முடியும் ... தொழிற் சங்க உணர்வு கொள்ளுங்கள் ..... உதவிகளை கேட்டுப் பெறுங்கள்...உங்களுக்கு உதவிடத்தானே நம் தொழிற் சங்க அமைப்புஅன்றில் வேறு எதற்கு ?......... உணர்வு கொள்வோம் ....... ஒன்று கூடுவோம்......உயிரோட்டத்துடன்  தொழிற்சங்கப் பாதையில்  ஊழியர்களை  பயணிக்க  செய்வோம்.

தோழமையடன்,
N .ராஜேந்திரன்
செயலர்